2020-21ஆம் நிதியாண்டில் நாட்டின் மொத்த நிதி பற்றாக்குறை அளவு இந்தியாவின் ஜிடிபி-யில் 9.3 சதவீதமாக உள்ளது. மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 2020ல் அறிவிக்கப்பட்ட பட்ஜெட் அறிவிப்பில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவீதமாக இருக்கும் என அறிவித்திருந்தார். ஆனால் கொரோனா தொற்றும், லாக்டவுன் அறிவிப்புகளும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு என அனைத்தையும் சூறையாடிய காரணத்தால் மத்திய அரசின் வருவாய் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டது.
from Share Market News in Tamil | Stock Market News in Tamil | Business News in Tamil - Goodreturns Tamil https://ift.tt/3p3Fksa
via IFTTT
No comments:
Post a Comment